திருநெல்வேலி மண்டல வேளாண்மை விற்பனைக்குழு உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் உள்ளிட்ட 12பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்திலுள்ள 11வேளாண்மை விற்பனை குழுக்களுக்கான உறுப்பினர்கள் அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி திருநெல்வேலி மண்டல வேளாண்மை விற்பனைக்குழு உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், விளாத்திக்குளம் வைப்பார் செண்பகப்பெருமாள், வி.கே.புதூர் செந்தில்குமார், ஆழ்வார்திருநகரி செம்பூர் ராஜ்நாராயணன், கடையநல்லூர் முருகன், ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல், நெல்லை லெட்சுமணப்பெருமாள், சீதபற்பநல்லூர் கணபதி சங்கரராமன், கோவில்பட்டி அய்யாத்துரைப்பாண்டியன், கயத்தார் மாரியப்பன், கலிங்கப்பட்டி துரைராஜ், நெல்லை பாலமுருகன் உள்ளிட்ட 12பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.