தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தைத் திருநாளை முன்னிட்டு பொங்௧ல் விழா தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் 13.01.2020 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில், வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, வங்கியின் இயக்குநர் திரு. S.R அசோக் அவர்கள், துணைத் தலைவர், வங்கியின் பொதுமேலாளர்கள், துணை பொதுமேலாளர்கள், உதவிப் பொதுமேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
வங்கியின் பெண் அலுவலர்கள் இணைந்து அழகிய வண்ணக் கோலங்களிட்டு பொங்கல் வைத்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கினர். விழாவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.